தங்கமணி வீட்டில் யாரும் இல்லை. வீடு பூட்டியிருந்தது. ‘சே..’ ஏமாற்றமாக உணர்ந்தான் சசி. அப்படியே நேராக நசீமா வீட்டுக்குப் போனான்.! வீடு திறந்திருந்தது. ஆனால் அவன் கண்ணில் யாரும் தெண்படவில்லை. உள்ளே போகலாமா வேண்டாமா.. என சிறிது
நேரம் குழம்பினான்.! உள்ளே போனாலும்.. நசீமாவின் பெற்றோர் இருந்தால்.. அது இன்னும் சிக்கல்தான்..! ஒரு பெருமூச்சுடன் சைக்கிளை மிதித்தான்.! நேராக தையல்கடை முன்பு போய் நிறுத்தினான். அண்ணாச்சியம்மா வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தாள். சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்குள் போக ராமு கேட்டான். ”கடைக்கு போகலியாடா..?” ”ப்ச்..” என சலிப்புக்கொட்டினான். ”ஏன்டா.. டல்லாருக்க..?” ”தலைவலிடா..” என்றான் உண்மையாகவே இப்போது தலைவலித்தது. ”மாத்திரை போட்டியா..?” ” இல்லடா.. இரு வரேன்..” என மளிகைக்கடைக்குப் போனான். அண்ணாச்சியம்மா வியாபாரம் முடியும்வரை காத்திருந்தான். வியாபாரத்தை முடித்த அண்ணாச்சியம்மா அவன் பக்கத்தில் வந்தாள். ”ஏன்டா.. போகலியா..?” ”இல்ல..! மாத்திரை குடுங்க..” ”என்ன மாத்திரை..?” ”அனாசின்..” ”ஏன் பையா.. தலைவலியா..?” ”ம்..ம்ம்..!” ”ஏன்.. எப்படி வந்துச்சு..?” ” அதெல்லாம் சொல்லிட்டா வரும்..?” ”தண்ணியடிச்சியா..?” ”அட.. ஏங்க…” ” காலைல வேலைக்கு போன இல்ல..?” ”ம்..ம்ம்..” ”வேற என்ன நைட் தூங்கலயா.?” ”நல்லா தூங்கினேன்..” ”சரி.. வீட்டுக்கு வா.. இஞ்சி போட்டு.. நல்லா சூடா ஒரு டீ போட்டு தரேன்..! அது குடிச்சா.. உன் தலைவலி போயிரும்..!” ”இல்ல.. வேண்டாம்..! நான் போய் கொஞ்ச நேரம் படுக்கறேன்.! மாத்திரை மட்டும் குடுங்க.. போதும்..!” மாத்திரை எடுத்து வந்து கொடுத்தாள். ”காசு..?” ”அக்கௌண்ட்ல வெச்சுக்கோங்க..” சிரித்தாள் ”டீ தரட்டுமாடா..?” ”நோ தேங்க்ஸ்..! நான் அப்றம் வரேன்.. பை..!!”என அங்கிருந்து நகர்ந்தான். ராமுவிடம் சொல்லிவிட்டு.. காம்பௌண்டுக்குள் போனான். இருதயா மாடிப்படியருகே நின்றிருந்தாள். ”ஹாய்.. எங்க பாக்கவே முடியறதில்ல..?” என்று புன்சிரிப்புடன் கேட்டாள். ”வேலை..” சிரித்தான் ”காலேஜ்..?” ”இப்பதான் வந்தேன்.! நீங்க லீவ்வா..?” ”ம்..ம்ம். .” அவளுடன் நின்று பேச அவனுக்கு மூடில்லை ”பை.. அப்றம் பாக்கலாம்..” என்று விட்டு குமுதா வீட்டுக்குப் போனான். குமுதா டி வி பார்த்துக் கொண்டிருந்தாள். ”போகலியாடா இன்னிக்கு..?” ”ம்..போனேன்..!!” கட்டில்மீது தொப்பென உட்கார்ந்தான் ”தண்ணி குடு..” ”ஏன்டா..?” ”தலைவலி..” என அவன் மாத்திரைக் கவரைப் பிரிக்க.. அவன் பக்கத்தில் வந்து கட்டிலில் ஏறிய மது.. கைநீட்டினாள் ”எக்கு..” ”ஐயோ.. இது மிட்டாய் இல்லடா செல்லம.. மாத்திரை.! நீயெல்லாம் சாப்பிடக்கூடாது.. அப்றமா வாங்கித் தரேன்..!” என்றான். தண்ணீர் கொடுத்தாள் குமுதா. ”காபி வெக்கட்டுமாடா..?” ”ம்..ம்ம்.! இஞ்சி இருந்தா.. தட்டி உள்ள போடு..!” அப்படியே பின்னால் சாய்ந்து படுத்து விட்டான். புவியாழினியை நினைக்க.. நினைக்க.. மேலும் அவனது தலைவலி அதிகமாவது போலிருந்தது.!! சிறிது நேரத்தில் குமுதா இஞ்சி டீயோடு வந்து அவனை எழுப்பினாள். ”இந்தாடா.. எந்திரி.. டீ குடி..” எழுந்து உட்கார்ந்து டீயை வாங்கினான். அவன் அருகில் உட்கார்ந்து.. அவனது தலையைத் தொட்டாள் குமுதா. ”ரொம்ப வலியாடா..?” அவன் எதுவும் பேசாமல் டீ குடித்தான். மெதுவாக அவன் தலையைக் கோதிவிட்டாள் குமுதா. ”இப்ப எங்கருந்து வர..?” ”வீட்லருந்து..” ”தலைகூட சீவாம வந்துருக்க.. படுத்துட்டிருந்தியா..?” ”ம்..ம்ம்..!” பாவம் கவி..! கவியின் பரிதாபமான தோற்றம் அவன் மனக்கண்ணில் தோண்றியது. ”மத்யாணத்துலருந்து தலைவலியா.?” ”ம்..ம்ம்..” ”தண்ணி ஏதாவது அடிச்சியா..?” திரும்பி அவளை முறைத்தான். சிரித்தாள் குமுதா. ”அப்பறம் எப்படிடா தலைவலி வந்துச்சு..?” ”போதும் விடு குமுதா.. நீ ஒரு பக்கம்.. நொய் நொய்னு கொடையாத..” என்றான். சிரித்தாள் ” சாப்பிட்டியாடா..?” ”ம்கூம்..” ”சாப்பிடாம இருந்தாக்கூட தலைவலி வருன்டா.. போடட்டுமா..?” ”ம்கூம்..! விடு ப்ளீஸ்.. நா கொஞ்ச நேரம் தூங்கறேன்..” என்று டீ யைக்குடித்துவிட்டு.. மறுபடியும் படுத்து விட்டான். அவன் எண்ணங்கள் புவியாழினியைச் சுற்றி ஓடியது.! மறுநாள் காலை… சசி தூங்கி எழுந்து வெளியே போனபோது.. வாசலில் நின்றிருந்த புவியாழினி.. அவனைப் பார்க்கப் பிடிக்காமல் விசுக்கெனத் திரும்பி வீட்டுக்குள் போய்விட்டாள். முகத்திலடித்தது போலிருந்தது அவனுக்கு. பாத்ரூம் போய் முகம் கழுவிக்கொண்டு அவள் வீட்டுக்குப் போனான்.! கவிதாயினி டி வி பார்த்துக் கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் சிரித்தாள். ”ஹாய் டா..” ”ஹாய்..” என்று விட்டு சேரில் உட்கார்ந்திருந்த புவியைப் பார்த்தான். அவள் கையில் ஏதோ ஒரு புத்தகம் இருந்தது. சசியை அவள் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. இருப்பினும் அவளோடு பேச எண்ணி… ”ஹாய்.. புவி..” என்றான். மனதின் வெக்கையுடன் அவனை முறைத்துப் பார்த்தாள். அவள் மூக்கு விடைத்தது. அவளது கோபமும்.. முறைப்பும் பொய்யானது இல்லை. சீற்றமாக ஒரு பெருமூச்சு விட்டாள். நடந்ததை அவளுக்கு விளக்க விரும்பினான். வேறு ஏதாவது ஒரு காரணம் சொல்லிக்கொள்ளலாம் என தீர்மானத்தான்.! ”டென்ஷனா இருக்கியா குட்டி..” அவ்வளவுதான் அடுத்த நொடி அவள் கையில் இருந்த புத்தகம் பறந்து போய் சுவற்றில் மோதிச் சிதறியது. அவளிடமிருந்து இப்படி ஒரு சீற்றத்தை அவன் எதிர் பார்க்கவில்லை. அதே கோபத்தோடு விருட்டென எழுந்து வெளியே போய்விட்டாள். ‘இவளுக்கு எப்படி புரிய வைப்பது..?’ என வருந்தினான் சசி. ”விட்றா.. அவ கெடக்கா..” என்றாள் கவிதாயினி. ”ச்ச..” கவியிடம் திரும்பினான் ”உனக்கு எப்படி இருக்கு இப்ப..?” ”ம்..ம்ம்..! தேவலை..!!” ”அவ கேட்டாளா.. உன்கிட்ட..?” ”கேக்கல.. ஆனா சண்டை போட்டா..! என்னை கண்டபடியெல்லாம் பேசினா..! இப்படித்தான்னு இல்ல.. தேவடியா.. அவ இவன்னு.. ரொம்பமே பேசினா.. என்னால பொருக்க முடியாம.. அவளை ஒரு அடி வெச்சிட்டேன்..” என்றாள். துணுக்குற்றான். ”அடிப்பாவி.. அவள ஏன் அடிச்ச..?” ”பின்ன.. எதுக்கும் ஒரு லிமிட் இருக்கில்ல..? கொஞ்சம்கூட பொருமையாவே பேச மாட்டேங்கறா.. நம்மள சேத்தி வெச்சு என்னெல்லாம் பேசினா தெரியுமா.?” ”ஏய்.. கவி.. அவ நம்மள மாதிரி இல்ல..! அவ ரொம்ப சென்சிடிவ்னு உனக்கும் தெரியும்ல..? தப்பு நமமளோடதுதான். அவ பார்வைல அது தப்பாதான் தெரியும்..! நீ விளக்கியிருக்கனும்.. அத விட்டுட்டு.. ஏன் இப்படி பண்ண..?” அவன் கவியிடம் கோபித்துக் கொண்டான். ”இல்லடா.. அதுக்கெல்லாம் அவ எங்கடா பொருமையா பேசினா..? கண்ணா பிண்ணானு சகட்டு மேணிக்கு உட்டு வாங்கறா.. அதுலதான் கோபம் வந்துருச்சு எனக்கு..” ”ச்ச… போடி..” அவன் இடிந்து போய் சோர்வோடு உட்கார்ந்தான். ”மச்சி நா ஒன்னு கேக்கட்டுமா..?” என்று கேட்டாள் கவி. ”என்ன..?” ”ரெண்டு பேரும்.. லவ் ஏதாவது பண்றீங்களா..?” திகைத்தான் ”ஏன்..?” ”இல்ல.. அவ என்னமோ.. அந்த போடு போடறா.. இப்ப நீ கூட பாரு.. அவளுக்காக ரொம்ப பீல் பண்ற..? ஓபனா சொல்டா.. பண்றீங்களா..?” ”ச்ச.. அதெல்லாம் இல்லடி..” ”அவ ஏதாவது.. உன் மேல.?” ”ஏய்.. நீ வேற.. அப்படியெல்லாம் எதுவும் இல்ல…” ”அப்றம் என்ன விடு..!!” என்றாள். ஒரு பெருமூச்சுடன் வெளியே போய் பார்த்தான் சசி. புவியைக் காணவே இல்லை. அவன் மனசு மிகவுமே இடிந்து போனது..!! அதன்பிறகு வந்த நாட்களில் புவி அவனைப் பார்ப்பதை சுத்தமாகவே தவிர்த்தாள். சசி எவ்வளவோ முயற்சித்தும்.. அவள் அவனோடு பேசத்தயாராக இல்லை. என்பது போலப் பிடிவாதமாக இருந்து வந்தாள்.! சசி அவளை மனதாரக் காதலித்தான்..! ஆனால் புவியாழினி.. அவனை மனதார வெறுத்தாள்….!!!!
நேரம் குழம்பினான்.! உள்ளே போனாலும்.. நசீமாவின் பெற்றோர் இருந்தால்.. அது இன்னும் சிக்கல்தான்..! ஒரு பெருமூச்சுடன் சைக்கிளை மிதித்தான்.! நேராக தையல்கடை முன்பு போய் நிறுத்தினான். அண்ணாச்சியம்மா வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தாள். சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்குள் போக ராமு கேட்டான். ”கடைக்கு போகலியாடா..?” ”ப்ச்..” என சலிப்புக்கொட்டினான். ”ஏன்டா.. டல்லாருக்க..?” ”தலைவலிடா..” என்றான் உண்மையாகவே இப்போது தலைவலித்தது. ”மாத்திரை போட்டியா..?” ” இல்லடா.. இரு வரேன்..” என மளிகைக்கடைக்குப் போனான். அண்ணாச்சியம்மா வியாபாரம் முடியும்வரை காத்திருந்தான். வியாபாரத்தை முடித்த அண்ணாச்சியம்மா அவன் பக்கத்தில் வந்தாள். ”ஏன்டா.. போகலியா..?” ”இல்ல..! மாத்திரை குடுங்க..” ”என்ன மாத்திரை..?” ”அனாசின்..” ”ஏன் பையா.. தலைவலியா..?” ”ம்..ம்ம்..!” ”ஏன்.. எப்படி வந்துச்சு..?” ” அதெல்லாம் சொல்லிட்டா வரும்..?” ”தண்ணியடிச்சியா..?” ”அட.. ஏங்க…” ” காலைல வேலைக்கு போன இல்ல..?” ”ம்..ம்ம்..” ”வேற என்ன நைட் தூங்கலயா.?” ”நல்லா தூங்கினேன்..” ”சரி.. வீட்டுக்கு வா.. இஞ்சி போட்டு.. நல்லா சூடா ஒரு டீ போட்டு தரேன்..! அது குடிச்சா.. உன் தலைவலி போயிரும்..!” ”இல்ல.. வேண்டாம்..! நான் போய் கொஞ்ச நேரம் படுக்கறேன்.! மாத்திரை மட்டும் குடுங்க.. போதும்..!” மாத்திரை எடுத்து வந்து கொடுத்தாள். ”காசு..?” ”அக்கௌண்ட்ல வெச்சுக்கோங்க..” சிரித்தாள் ”டீ தரட்டுமாடா..?” ”நோ தேங்க்ஸ்..! நான் அப்றம் வரேன்.. பை..!!”என அங்கிருந்து நகர்ந்தான். ராமுவிடம் சொல்லிவிட்டு.. காம்பௌண்டுக்குள் போனான். இருதயா மாடிப்படியருகே நின்றிருந்தாள். ”ஹாய்.. எங்க பாக்கவே முடியறதில்ல..?” என்று புன்சிரிப்புடன் கேட்டாள். ”வேலை..” சிரித்தான் ”காலேஜ்..?” ”இப்பதான் வந்தேன்.! நீங்க லீவ்வா..?” ”ம்..ம்ம். .” அவளுடன் நின்று பேச அவனுக்கு மூடில்லை ”பை.. அப்றம் பாக்கலாம்..” என்று விட்டு குமுதா வீட்டுக்குப் போனான். குமுதா டி வி பார்த்துக் கொண்டிருந்தாள். ”போகலியாடா இன்னிக்கு..?” ”ம்..போனேன்..!!” கட்டில்மீது தொப்பென உட்கார்ந்தான் ”தண்ணி குடு..” ”ஏன்டா..?” ”தலைவலி..” என அவன் மாத்திரைக் கவரைப் பிரிக்க.. அவன் பக்கத்தில் வந்து கட்டிலில் ஏறிய மது.. கைநீட்டினாள் ”எக்கு..” ”ஐயோ.. இது மிட்டாய் இல்லடா செல்லம.. மாத்திரை.! நீயெல்லாம் சாப்பிடக்கூடாது.. அப்றமா வாங்கித் தரேன்..!” என்றான். தண்ணீர் கொடுத்தாள் குமுதா. ”காபி வெக்கட்டுமாடா..?” ”ம்..ம்ம்.! இஞ்சி இருந்தா.. தட்டி உள்ள போடு..!” அப்படியே பின்னால் சாய்ந்து படுத்து விட்டான். புவியாழினியை நினைக்க.. நினைக்க.. மேலும் அவனது தலைவலி அதிகமாவது போலிருந்தது.!! சிறிது நேரத்தில் குமுதா இஞ்சி டீயோடு வந்து அவனை எழுப்பினாள். ”இந்தாடா.. எந்திரி.. டீ குடி..” எழுந்து உட்கார்ந்து டீயை வாங்கினான். அவன் அருகில் உட்கார்ந்து.. அவனது தலையைத் தொட்டாள் குமுதா. ”ரொம்ப வலியாடா..?” அவன் எதுவும் பேசாமல் டீ குடித்தான். மெதுவாக அவன் தலையைக் கோதிவிட்டாள் குமுதா. ”இப்ப எங்கருந்து வர..?” ”வீட்லருந்து..” ”தலைகூட சீவாம வந்துருக்க.. படுத்துட்டிருந்தியா..?” ”ம்..ம்ம்..!” பாவம் கவி..! கவியின் பரிதாபமான தோற்றம் அவன் மனக்கண்ணில் தோண்றியது. ”மத்யாணத்துலருந்து தலைவலியா.?” ”ம்..ம்ம்..” ”தண்ணி ஏதாவது அடிச்சியா..?” திரும்பி அவளை முறைத்தான். சிரித்தாள் குமுதா. ”அப்பறம் எப்படிடா தலைவலி வந்துச்சு..?” ”போதும் விடு குமுதா.. நீ ஒரு பக்கம்.. நொய் நொய்னு கொடையாத..” என்றான். சிரித்தாள் ” சாப்பிட்டியாடா..?” ”ம்கூம்..” ”சாப்பிடாம இருந்தாக்கூட தலைவலி வருன்டா.. போடட்டுமா..?” ”ம்கூம்..! விடு ப்ளீஸ்.. நா கொஞ்ச நேரம் தூங்கறேன்..” என்று டீ யைக்குடித்துவிட்டு.. மறுபடியும் படுத்து விட்டான். அவன் எண்ணங்கள் புவியாழினியைச் சுற்றி ஓடியது.! மறுநாள் காலை… சசி தூங்கி எழுந்து வெளியே போனபோது.. வாசலில் நின்றிருந்த புவியாழினி.. அவனைப் பார்க்கப் பிடிக்காமல் விசுக்கெனத் திரும்பி வீட்டுக்குள் போய்விட்டாள். முகத்திலடித்தது போலிருந்தது அவனுக்கு. பாத்ரூம் போய் முகம் கழுவிக்கொண்டு அவள் வீட்டுக்குப் போனான்.! கவிதாயினி டி வி பார்த்துக் கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் சிரித்தாள். ”ஹாய் டா..” ”ஹாய்..” என்று விட்டு சேரில் உட்கார்ந்திருந்த புவியைப் பார்த்தான். அவள் கையில் ஏதோ ஒரு புத்தகம் இருந்தது. சசியை அவள் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. இருப்பினும் அவளோடு பேச எண்ணி… ”ஹாய்.. புவி..” என்றான். மனதின் வெக்கையுடன் அவனை முறைத்துப் பார்த்தாள். அவள் மூக்கு விடைத்தது. அவளது கோபமும்.. முறைப்பும் பொய்யானது இல்லை. சீற்றமாக ஒரு பெருமூச்சு விட்டாள். நடந்ததை அவளுக்கு விளக்க விரும்பினான். வேறு ஏதாவது ஒரு காரணம் சொல்லிக்கொள்ளலாம் என தீர்மானத்தான்.! ”டென்ஷனா இருக்கியா குட்டி..” அவ்வளவுதான் அடுத்த நொடி அவள் கையில் இருந்த புத்தகம் பறந்து போய் சுவற்றில் மோதிச் சிதறியது. அவளிடமிருந்து இப்படி ஒரு சீற்றத்தை அவன் எதிர் பார்க்கவில்லை. அதே கோபத்தோடு விருட்டென எழுந்து வெளியே போய்விட்டாள். ‘இவளுக்கு எப்படி புரிய வைப்பது..?’ என வருந்தினான் சசி. ”விட்றா.. அவ கெடக்கா..” என்றாள் கவிதாயினி. ”ச்ச..” கவியிடம் திரும்பினான் ”உனக்கு எப்படி இருக்கு இப்ப..?” ”ம்..ம்ம்..! தேவலை..!!” ”அவ கேட்டாளா.. உன்கிட்ட..?” ”கேக்கல.. ஆனா சண்டை போட்டா..! என்னை கண்டபடியெல்லாம் பேசினா..! இப்படித்தான்னு இல்ல.. தேவடியா.. அவ இவன்னு.. ரொம்பமே பேசினா.. என்னால பொருக்க முடியாம.. அவளை ஒரு அடி வெச்சிட்டேன்..” என்றாள். துணுக்குற்றான். ”அடிப்பாவி.. அவள ஏன் அடிச்ச..?” ”பின்ன.. எதுக்கும் ஒரு லிமிட் இருக்கில்ல..? கொஞ்சம்கூட பொருமையாவே பேச மாட்டேங்கறா.. நம்மள சேத்தி வெச்சு என்னெல்லாம் பேசினா தெரியுமா.?” ”ஏய்.. கவி.. அவ நம்மள மாதிரி இல்ல..! அவ ரொம்ப சென்சிடிவ்னு உனக்கும் தெரியும்ல..? தப்பு நமமளோடதுதான். அவ பார்வைல அது தப்பாதான் தெரியும்..! நீ விளக்கியிருக்கனும்.. அத விட்டுட்டு.. ஏன் இப்படி பண்ண..?” அவன் கவியிடம் கோபித்துக் கொண்டான். ”இல்லடா.. அதுக்கெல்லாம் அவ எங்கடா பொருமையா பேசினா..? கண்ணா பிண்ணானு சகட்டு மேணிக்கு உட்டு வாங்கறா.. அதுலதான் கோபம் வந்துருச்சு எனக்கு..” ”ச்ச… போடி..” அவன் இடிந்து போய் சோர்வோடு உட்கார்ந்தான். ”மச்சி நா ஒன்னு கேக்கட்டுமா..?” என்று கேட்டாள் கவி. ”என்ன..?” ”ரெண்டு பேரும்.. லவ் ஏதாவது பண்றீங்களா..?” திகைத்தான் ”ஏன்..?” ”இல்ல.. அவ என்னமோ.. அந்த போடு போடறா.. இப்ப நீ கூட பாரு.. அவளுக்காக ரொம்ப பீல் பண்ற..? ஓபனா சொல்டா.. பண்றீங்களா..?” ”ச்ச.. அதெல்லாம் இல்லடி..” ”அவ ஏதாவது.. உன் மேல.?” ”ஏய்.. நீ வேற.. அப்படியெல்லாம் எதுவும் இல்ல…” ”அப்றம் என்ன விடு..!!” என்றாள். ஒரு பெருமூச்சுடன் வெளியே போய் பார்த்தான் சசி. புவியைக் காணவே இல்லை. அவன் மனசு மிகவுமே இடிந்து போனது..!! அதன்பிறகு வந்த நாட்களில் புவி அவனைப் பார்ப்பதை சுத்தமாகவே தவிர்த்தாள். சசி எவ்வளவோ முயற்சித்தும்.. அவள் அவனோடு பேசத்தயாராக இல்லை. என்பது போலப் பிடிவாதமாக இருந்து வந்தாள்.! சசி அவளை மனதாரக் காதலித்தான்..! ஆனால் புவியாழினி.. அவனை மனதார வெறுத்தாள்….!!!!
No comments:
Post a Comment