
ஹேங்க் ஓவர்டா..” டீ வாங்கி வந்த ராமுவிடம் சொன்னான் சசி ”பயங்கர தலைவலி..” சிரித்த ராமு ”ஆமாடா.. எனக்கும் செரியான தலைவலி. நாலு மணிக்குத்தான் கடையே தெறந்தேன்..!” என்றான். ”மப்புல நான் என்னென்னமோ பேசிருக்கேண்டா.. ஆனா அது ஒன்னுகூட எனக்கு நாபகமே வரல..! இந்த மாதிரி ஆனது.. லைப்லயே எனக்கு இதான்டா.. பர்ஸ்ட் டைம். வீட்ல செம ஏத்து..” டீ யை உறிஞ்சினான் சசி. ”சரக்குதான்டா செரியில்ல.. ரொம்ப மட்டமான சரக்கு..” ”பிரகாஷ் எப்படிடா.. டெய்லி குடிக்கறான்.. இதே சரக்க..?” ”அவனுக்கு பழகிருச்சுடா .” ”அப்றம்.. நம்ம நண்பனுக வந்தானுகளா..?” ”இலலடா..! நீதான் வந்துருக்க.. இனி அவனுக என்ன ஆனானுகனு தெரியல..” ”இனிமே இந்த சரக்கு பிசினஸே வேனான்டா..! பீரோட நிறுத்திக்கனும்..!!” என்றான் சசி. சசிக்கு.. தலைபாரமாகவேதான் இருந்தது. அது ஒருவித அவஸ்தையாகவே நீடித்தது. அதனால் அவனுக்கு ஜாலி மூடு வரவே இல்லை.

அண்ணாச்சியம்மாவிடம் போய்.. சாதாரணமாக சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு.. குமுதா வீட்டில் போய் படுத்துக் கொண்டான். அவன் அங்கிருந்து கிளம்பி வீடு போனபோது எட்டரை மணி. அவனுடைய அப்பா சாப்பிட்டுக்கொண்டிருக்க.. நேராக புவியாழினி வீட்டுக்குப் போனான். ஊரிலிருந்து கவிதாயினி வந்து விட்டாள். அம்மா.. மகள்கள் என மூவரும் கீழே உட்கார்ந்து பூ கட்டிக்கொண்டிருந்தார்கள். சசியைப் பார்த்ததும்… ”வாங்க சார்..” என்று சிரித்தாள் புவியாழினி ”தெளிவாத்தான இருக்கீங்க..?” பக்கத்தில் போய் அவள் தலைமீது கொட்டினான். ”வாயாடி.. ” ”ஆ..!!” மண்டையைத் தேய்த்துக் கொண்டாள். புவனா ”உக்காரு சசி..” என்றாள். புவியாழினி பக்கத்தில் சேர் இருந்தது. அதில் உட்கார்ந்தான். கவிதாயினியைப் பார்த்து.. ”ஹோய்.. எப்ப வந்த..?” என்று கேட்டான். ”ஏழு மணிக்குடா..! என்னடா மாமு நடந்துச்சு நேத்து..?”என்று சாதாரணமாகக் கேட்டாள். ”அத ஏன்.. இப்ப நாபகப்படுத்தற..?” ”ஏன்டா.. மாமு.. நேத்து ரொம்ப ஹெவியா.?” சசி சிரித்தான். புவியாழினி ”ஹெவியாவா..? ஹ்ஹா…ஹா.. மாமா டவுசர் கழண்டு போச்சு..” என்று சிரித்தாள். அவள் காதைப் பிடித்து திருகினான் சசி. ”நீ பேசாத…” ”நா..பேசாம..வேற யாரு பேசுவாங்களாம்..?” அவன் காலில் கிள்ளினாள். கவிதாயினி ”பார்ட்டியாடா..?” எனக் கேட்டாள். ”ஏய்.. வேற ஏதாவது பேசலாம்ப்பா.. மானக்கேடா இருக்கு..” என்றான். புவியாழினி விழுந்து விழுந்து சிரிக்க.. காலால் அவள் அடித்தொடையில் இடித்தான். புவனா ”நேத்தோட எல்லாம் முடிஞ்சுதா.. சசி..?” எனக் கேட்டாள். ”ஆமாக்கா..” ”அதான் ஓவரா போச்சு..” ”ஐயோ..! நீங்க வேற ஏன்க்கா..?” ”அட.. என்ன சசி.. எனக்கு கல்யாணமெல்லாம் பண்ணி வெக்கறதா சொன்ன..?” எனக் கிண்டல் செய்தாள் மௌனமாகச் சிரித்தான். புவியாழினி முகத்தை அன்னாந்து வாய் பொத்திச் சிரித்தாள். அவளால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை. சசி.. ரகசியமாக அவள் அடித்தொடையில்.. கால் விரல்களால் கிள்ள முயன்றான். கவிதாயினி ”வேணாண்டா மாமு நாங்க மூணுபேரே.. சந்தோசமாத்தான் இருக்கோம். எங்களுக்கு புதுசா ஒரு அப்பன கொண்டு வந்து எங்கள பிரிச்சுராத..” என்றாள். புவி ”பெத்த அப்பனே விட்டுட்டு ஓடிட்டான்..” என்க. சசி ”ஸாரிக்கா.. மப்புல நான் என்ன பேசினேன்னு எனக்கு ஒன்னுமே நாபகம் இல்ல..!” என்றான். ”ஆ.. அதெப்படி.. ஆளுல்லாம் கரெக்ட்டா அடையாளம் தெரியுது. பேசினது மட்டும் தெரியாம போய்ருமா..?” என அவன் வாயைக் கிண்டினாள் புவியாழினி. அவள் காதைப் பிடித்து திருகினான் ” இரு.. இரு.. உனக்கு ஒரு நாளைக்கு.. புடிச்சு வாய்ல ஊத்தியுட்டர்றேன்.! அப்ப தெரியும்..!” ”உவ்வே..! நானெல்லாம் செத்தே போவேன்..!” என்றாள். கவிதாயினி ”ஏன்டா..மச்சி..” என்றாள். ”ம்…?” அவளைப் பார்த்தான். ”ஹாட்டா… கூலா..?” ”ஹாட்டு..” ”அதான்..! நீ எப்பவும் பீர்தான்டா குடிப்ப..?” ”ஆமா.. கவி..! நேத்து.. பீரு தீந்து போச்சு..! அதான் ஹாட்டு எடுத்தேன்..!! இல்லேன்னா இப்படி நடந்துருக்காது..!!” கவிதாயினியோடு பேசிக்கொண்டே.. புவியாழினியை அவவப்போது ரகசியமாக..நோண்டிக்கொண்டிருந்தான். அவள் முதுகில்.. தட்டுவது.. பிடறியை வருடுவது.. என..!! அவளும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. அவர்கள் பூ கட்டி முடிக்க பத்தரைமணி ஆனது. அதுவரை அவர்களுடனேயேதான் பேசிக்கொண்டிருந்தான் சசி. இடையில் அவன் அம்மா ஒரு முறை வந்து.. ”சாப்பிட வாடா..?” என்று கூப்பிட்டாள். ”ம்.. ம்ம்..! வரேன்..! நீ போய் படுத்துக்க.!” என்றான். பூ கட்டிமுடித்து.. எழுந்து நின்று.. கைகளை தலைக்கு மேல் தூக்கி.. உடம்பை முன்னால் வளைத்து.. சோம்பல் முறித்தாள் புவியாழினி. வாயைப் பிளந்து ‘ஆ..’ வெனக் கொட்டாவி விட்டாள். அநதக் காட்சியை அவனால் ரசிக்க மட்டுமே முடிந்தது. சசியும் எழுந்தான் ”சரி.. நானும் போய் படுக்கறேன்.! பை கவி..!” ”பை டா..!! ஸ்வீட் ட்ரீம்ஸ்..!!”என்றாள். புவியாழினி ” நான் படுத்தா போதும் அடுத்த நிமிசமே தூங்கிருவேன்..” என்றாள். ”தெரியுமே.. கும்பகர்ணி..!!” அவள் கன்னத்தில் கிள்ளி ”பை..!!” என அவன் வெளியேற.. அவன் தோளில் தொங்கியவாறு.. அவளும் அவன் பின்னாலேயே வந்தாள். ” உங்கப்பா தூங்கிருப்பாரு..! பயப்படாம போய் சாப்பிட்டு தூஙகுங்க..!” என்றாள். ”ஏய்.. யாரு பயந்தா இப்ப..?” ”ஆஹா.. வீராச்சாமி..!!” பாத்ரூம் அருகே இருட்டாக இருந்தது. அவன் தோளில் தொங்கியவாறே வந்த புவியாழினி. ”உங்கம்மாவும் தூங்கிருச்சு போலருக்கு..?” என்றாள். ”ம்..ம்ம்..! தூங்கிருக்கும்..!!”நின்றான். ”அப்றம் ஒரு குட் நியூஸ்..” ”என்ன..?” ” எங்கம்மா..எக்ஸெல வித்துட்டு.. ஸ்கூட்டி வாங்கப் போகுது..” ”அப்டியா..! பணம்..?” ”பாட்டிகிட்ட போய் கவி வாங்கிட்டு வந்துருக்கா..” ”ஓ..! அதுக்குத்தான் ஊருக்கு போனாளா..?” ”ம்..ம்ம்..!” அவன் கையைப் பிடித்தபடி வானத்தை அன்னாந்து பார்த்தாள் ”நெலா.. வானத்துல அழகா இருக்கு.. இல்ல..?” அவனும் பார்த்தான். மேகங்களுக்கிடையே கொஞ்சமாக நிலா முகம் தெரிந்தது. ”ஆனா பாவம்..” ”என்ன பாவம்..?” ”பல நூற்றாண்டுகளா இருக்கு.. ஆனா இப்ப வரை.. அதுக்கு ஒரு பாய் பிரெண்டு செட்டாகவே இல்ல..! என்ன கொடுமை பாத்தியா. .?” அவள் இடுப்பைச் சுற்றி கை போட்டான். ”இது ரொம்ப ஓவரா இல்ல..?” அவனைப் பார்த்தாள். அவள் இடுப்பை தடவினான் ”எது ஓவர்..? நிலாவ பொண்ணுன்னு சொன்னா ரசிப்பிங்க..! அதே அதுக்கு பாய் பிரெண்டு இல்லேன்னு சொன்னா.. அது ஓவரா இருக்கா..?” ”ஆமா..! நிலா.. ஆணா.. பெண்ணா..?” அவன் தோளில் சாய்ந்தாள். அவளிடமிருந்து பூ வாசணை வீசியது.

அவள் கன்னத்தில் மிக மெண்மையாக உதட்டைப் பதித்தான். ”மக்கு… மக்கு…!!” சிரித்தாள் ”சரி.. சரி..! அதெல்லாம் பேச.. நாம என்ன லவ்வர்ஸா..? அது ஆணா இருந்தா என்ன.. பெண்ணா இருந்தா என்ன.? அழகாருக்கு.. ரசிக்கலாம்..! அவ்வளவுதான்.. இல்ல..?” ”கரெக்ட்..” மறுபடி ஒரு முத்தம் கொடுத்தான் ”உன்ன மாதிரி ரெண்டு..முட்டக்கண்களும்.. ஒரு குட்டி மூக்கும்..க்யூட் லிப்போட.. சிப்பி வாயும் இருந்தா.. இன்னும் சூப்பரா இருக்கும்..” சட்டென அவன் தலையில் கொட்டினாள். ”ஆஹா.. ஆரம்பிச்சாச்சா உங்க இத…” அவள் மார்பை பிடித்தான். ”எத..?” ”ம்.. உங்க வழிசல..! இதுக்கு மேல நின்னா எனக்குத்தான்.. ஆபத்து..! போங்க.. போய் சாப்பிட்டு படுத்து தூங்குங்க..!” என்று விலகினாள். அவள் கையைப் பிடித்தான் ”ஏய்..புவி..” ”ம்..ம்ம்..?” நின்றாள். சட்டென அவளை இழுத்து அணைத்து.. அவள் உதட்டில் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தான் சசி. ”ம்..ம்ம்..!!” அவன் நெஞ்சில் கை வைத்து.. அவனைத் தள்ளி விட்டு.. விலகி ஓடி பாத்ரூமில் புகுந்து கொண்டாள் புவியாழினி….!!!!!
No comments:
Post a Comment